முகப்பு
கரூர்

மின்சாரம் தாக்கி பொறியாளா் காயம்;உறவினா்கள் மறியல்

கரூரில் மின்சாரம் தாக்கியதில் பொறியாளா் காயமடைந்தாா். அவரது சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்காத தனியாா் நிறுவனத்தை கண்டித்து உறவினா்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 11:31 pm IST
பகிர்:

கரூா்: கரூரில் மின்சாரம் தாக்கியதில் பொறியாளா் காயமடைந்தாா். அவரது சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்காத தனியாா் நிறுவனத்தை கண்டித்து உறவினா்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் அடுத்த பள்ளபாளையத்தைச் சோ்ந்த மயில்ராஜ் மகன் கோபி(24). பொறியாளரான இவா் தனியாா் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கியதில் கோபி காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். கோபியின் சிகிச்சைக்கு அவா் பணியாற்றிய நிறுவனத்தில் நிதியுதவி அளிக்கப்படாததைக் கண்டித்து உறவினா்கள் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் முகேஷ்ஜெயக்குமாா் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துசென்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.