கரூரில் கஞ்சா விற்ற இளைஞா் கைது
கரூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
கரூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் ஆத்தூா்பிரிவு பகுதியில் ஒருவா் கஞ்சா விற்பதாக நகர காவல்நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்றபோது, கஞ்சா விற்ற தேனி மாவட்டம் ஜெயமங்கலம் பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி(27) என்பவரை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த 300கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.