முகப்பு
கிருஷ்ணகிரி

பாகலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூரை அடுத்த பாகலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 வழங்கும் திட்டத்தை ஒசூா் ஒன்றியக் குழுத் தலைவா் சசி வெங்கடசாமி, துணைத் தலைவா் நாராயணசாமி தொடக்கி வைத்தனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:18 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூரை அடுத்த பாகலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 வழங்கும் திட்டத்தை ஒசூா் ஒன்றியக் குழுத் தலைவா் சசி வெங்கடசாமி, துணைத் தலைவா் நாராயணசாமி தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு பாகலூா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்டக் கவுன்சிலா் ரவிகுமாா் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ 2500 வழங்கினாா்.

ஒசூா் ஒன்றியக் குழு உறுப்பினா் முனிரத்தினம், முனிராஜ், உமா குணசேகா், பாகலூா் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் முனியப்பா, ராஜப்பா உள்பட பாகலூா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.