தற்போதைய செய்திகள்

3-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

தினமணி

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 509 ரன்கள் எடுத்தது.

1 விக்கெட் இழப்புக்கு 216 ரன் என்ற நிலையில் மூன்றாவது நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி, அலிஸ்டர் குக்கின் அபார ஆட்டத்தால் நல்ல ரன்னைப் பெற்றது. அவர் 190 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். டிராட் 87, பீட்டர்ஸன் 54, பெல் 5, படேல் 33 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பிரையர் 40 ரன்களுடனும் ஸ்வான் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் 6 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 509 ரன்களைக் குவித்திருந்தது. இந்தியாவை விட முதல் இன்னிங்ஸில் 193 ரன் அதிகம் பெற்று, 4 விக்கெட் மீதம் உள்ள நிலையில் வலுவாக உள்ளது இங்கிலாந்து அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT