இந்தியாவுக்கு சரப்ஜித் சிங்கின் உடலை அனுப்ப பாகிஸ்தான் ஒப்புதல்
சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இந்த நிலையில், சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக சிறப்பு விமானத்தை மத்திய அரசு லாகூருக்கு அனுப்ப உள்ளது.
பாகிஸ்தான் ஜின்னா மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement