சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்தார் ஷிண்டே
பாகிஸ்தான் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு, ஷிண்டே உறுதி அளித்துள்ளார்.
பாகிஸ்தான் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு, ஷிண்டே உறுதி அளித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இன்று சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பிர் கௌர் மற்றும் இதர குடும்ப உறவினர்களிடம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சரப்ஜித் சிங்கின் உடலைக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டால், குடும்பத்தினரின் விருப்பப்படி இறுதி சடங்குகளை செய்து கொள்ளலாம். இந்தியாவிடம் சரப்ஜித் சிங்கின் உடலை ஒப்படைப்பது பாகிஸ்தான் அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் இருக்கிறது. அதற்காக தான் காத்திருக்கிறோம் என்று ஷிண்டே கூறினார்.