தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி சாலை மறியல்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தங்கச்சிமடத்தில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தங்கச்சிமடத்தில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர் சங்கங்களைச் சேர்ந்தோர் இன்று காலை தங்கச்சிமடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பாட்டது.
இந்திய - இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement