முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் போராட்டம் நடத்த யாசின் மாலிக்குக்கு அனுமதி மறுப்பு

தில்லியில் போராட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி யாசின் மாலிக்குக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது.

Updated On : 2 மே 2013, 11:00 am IST
பகிர்:

தில்லியில் போராட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி யாசின் மாலிக்குக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது.

அப்சல் குருவின் உடலை குடும்பத்திடம் ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புது தில்லியில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் தில்லி காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பாதுகாப்பு அமைப்பு அளித்த பரிந்துரையின்படி, இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் தில்லியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.