முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆள்மாறாட்டம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது

சென்னை தியாகராய நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். காஞ்சிபுரத்தில் அவருக்கும், அவருடைய சகோதரர் பிரிதிவிராஜுக்கு சொந்தமான நிலம் 35 சென்ட் நிலம் இருந்தது.

Updated On : 21 மே 2013, 12:46 pm IST
பகிர்:

சென்னை தியாகராய நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். காஞ்சிபுரத்தில் அவருக்கும், அவருடைய சகோதரர் பிரிதிவிராஜுக்கு சொந்தமான நிலம் 35 சென்ட் நிலம் இருந்தது. அதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி ஆகும்.

இதன்படி தாய், தந்தையர் பெயரில் ஆவணம் பதிவாகி இருந்தது. அவர்கள் காலமானதால், அந்த சொத்துக்கள் மகன்களான சந்திரசேகர் மற்றும் அவரது சகோதரரான பிரிதிவிராஜுக்கும் உரிமையானது.

சந்திரசேகரின் சொத்துக்களை, அவரது சகோதரர் பிரிதிவிராஜ் போன்று ஆள் மாறாட்டம் செய்து போலியான ஆவனம் தயாரித்து சொத்தைகளை அபகரித்துள்ளதை அறிந்தார். அதன்படி தகவலறிந்து சந்திரசேகர் தன் நிலம் அபகரிப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து சென்னை காவல் ஆனையாளரிடம் புகார் கொடுத்தார். அதன்படி காவல் ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் புகார்தாரருக்கு சொந்தமான இடத்தை பெசன்ட் நகரை  சேர்ந்த சாந்தி என்பர் தன்னுடைய சகோதரர் போன்று போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை அபகரித்துள்ளது தெரிய வந்தது. அதன்படி இன்று காலை சாந்தியை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆனையாளர்கள் பெசன்ட் நகரில் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.