முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹரியானா முன்னாள் முதல்வர் சௌதாலாவுக்கு ஜாமீன்

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Updated On : 21 மே 2013, 3:42 pm IST
பகிர்:

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஹரியானாவில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு உடல்நிலை குறைவு காரணமாக, 6  வார கால இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சௌதாலாவின் உடல்நிலைக் குறித்து மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.