இஸ்ரேலில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
கிரீக் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று, இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் அவசரமாக தரையிறங்கியது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM
கிரீக் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று, இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் அவசரமாக தரையிறங்கியது.
பயணிகள், விமான ஊழியர்கள் என மொத்தம் 170 பேருடன் வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து அருகில் உள்ள பென் கரியன் சர்வதே விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.