முன்னாள் தடகள வீராங்கனை சாந்திக்கு நிதியுதவி
முன்னாள் தடகள வீராங்கனை சாந்தி சுந்தரராஜன்,தேசிய விளையாட்டு மையத்தில் டிப்ளமோ படிப்பு படிப்பதற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் தடகள வீராங்கனை சாந்தி சுந்தரராஜன்,தேசிய விளையாட்டு மையத்தில் டிப்ளமோ படிப்பு படிப்பதற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டுத் துறை மையம், ரூ.60,500ஐ, சாந்தியின் மேற்படிப்புக்காக ஒதுக்கியுள்ளது.
தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற விளையாட்டு வீராங்கனை சாந்தி, பாலினப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement