சிதம்பரம் அருகே ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயில் ஐம்பொன் சிலைகள் திருட்டு
சிதம்பரம் அருகே உள்ள கீழநத்தம் ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயிலில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்த 6 ஐம்பொன் சிலைகளை திருடிச்சென்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள கீழநத்தம் ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயிலில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்த 6 ஐம்பொன் சிலைகளை திருடிச்சென்றனர்.
சிதம்பரம் அருகே கீழநத்தம் கிராமத்தில் ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் முன்புறக்கதவை உடைத்து உள்ளே புகுந்து 2 அடி உயரமுள்ள ஸ்ரீசிவகாமசுந்தர், ஸ்ரீமுருகர், ஒன்றடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை, ஒரு அடி உயரமுள்ள மாணிக்காவாசகர், சுந்ததர் ஆகிய 6 ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் தாலுக்கா போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூரிலிருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்படும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.