இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு
இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM
இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும், புதன்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்புத் துறை பேச்சாளர் பால்டா தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement