முகப்பு
இந்தியா

நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

பிகாரில் நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது செய்யப்பட்டது பற்றி...

Updated On : 14 ஜூன் 2026, 6:50 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பிகாரில் நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிகாரின் முசாஃபர்பூர் நகரில் நீட் தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான போலி வினாத்தாள்களை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் ஏமாற்றி விற்ற 4 பேரை அம்மாநில காவல்துறை நேற்று மாலை கைது செய்தது.

கைதான ஹர்ஷ், அமன் குமார், கன்னையா குமார் மற்றும் ஹர்ஷ் கனோடியா ஆகியோரிடமிருந்து 3 மொபைல் போன்களும், போட்டித் தேர்வுகளுக்கான போலி வினாத்தாள்களும் கைப்பற்றப்பட்டன.

Advertisement

Advertisement

”கைதான நபர்கள் ஒரு வலையமைப்பின் கீழ் சமூக வலைதளங்கள் மூலம் நீட் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் போலி வினாத்தாள்களை பெற்றோரிடமும் மாணவர்களிடமும் விற்று வந்தனர். இதுபற்றி முன்பு இதே புகாரில் கைதான மனிஷ் ஜா அளித்த புகாரின் பேரில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டனர்” என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், “விசாரணையில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நபர்களிடம், தங்களிடம் தேர்வு வினாத்தாள் இருப்பதாக ஏமாற்றி சமூக வலைதளங்கள் மூலம் போலி வினாத்தாள்களை விற்றுள்ளனர்.

அதற்கான பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் வங்கி கணக்கில் அனுப்பச் சொல்லி, அதனை மணீஷ் ஜாவிடம் ஒப்படைத்து வந்தனர்” என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

summary

Individuals arrested for selling fake NEET question papers!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.