ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. ஆட்டம் மழை காரணமாக 25 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 66 பந்துகளில் 84 ரன்கள் (11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
நேற்றையப் போட்டியில் 84 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்தார். அவர் 62 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்த வீரர்கள்
ஹாசிம் ஆம்லா - 57 இன்னிங்ஸ்களில்
ஷுப்மன் கில் - 62 இன்னிங்ஸ்களில்
சாய் ஹோப் - 67 இன்னிங்ஸ்களில்
ஃபகர் ஸமான் - 67 இன்னிங்ஸ்களில்
இமாம் உல் ஹக் - 67 இன்னிங்ஸ்களில்