சிபிஐ நீதிமன்றம் முன்பு ஆஜரானார் அனில் அம்பானி
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் முன்பு இன்று நேரில் ஆஜரானார் தொழில் அதிபர் அனில் அம்பானி.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் முன்பு இன்று நேரில் ஆஜரானார் தொழில் அதிபர் அனில் அம்பானி.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் அளித்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி அனில் அம்பானி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது உடனடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், இன்று புது தில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்த அனில் அம்பானி, நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Advertisement
Advertisement