தா. கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி விடுதலை : தமிழக அரசு மேல்முறையீடு
தமிழக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட வழக்கில். மு.க. அழகிரி விடுதலையானதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM
தமிழக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட வழக்கில். மு.க. அழகிரி விடுதலையானதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மதுரையில் கடந்த 2003ஆம் ஆண்டு திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், மு.க. அழகிரி உட்பட 13 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து, மு.க. அழகிரி உட்பட 13 பேரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழக அரசு தற்போது, மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
Advertisement