தொடரும் ஐ.ஓ.பி. வங்கிச் சேவை பாதிப்பு: லட்சக்கணக்கான வாடிக்கையாளர் தவிப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மைய கணினி இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்ந்து நீடிப்பதால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மைய கணினி இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்ந்து நீடிப்பதால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மைய வங்கி கணினி இணைப்பில்(கோர் பேங்கிங் சர்வர்)ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் திங்கள்கிழமை முதல் பணப்பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், பணம் செலுத்துதல் போன்ற அன்றாட வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.,) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த வங்கி நாடு முழுவதும் மூவாயிரம் கிளைகளை கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
Advertisement
Advertisement
இந்த கோளாறால் நாடு முழுவதும் ஐ.ஓ.பி.,யின் வங்கி நடவடிக்கைகள் முடங்கின. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த வங்கியில் கடந்த நான்கு நாள்களாக வாடிக்கையாளர் சேவைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதன்கிழமையன்று மட்டும் கணினியில் ஏற்பட்ட கோளாறு சீரடைந்து சில மணி நேரம் வங்கி நடவடிக்கைகள் நடைபெற்றன. அப்போது வங்கி காசோலைகள் பரிவர்த்தனை மட்டும் நடந்தது. அதன் பின்பு மீண்டும் பழைய நிலையே நீடித்தது.
தொடர்ந்து நீடிக்கும் பிரச்னையால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ, பணத்தை செலுத்தவோ முடியாமல் அவதிப்படுகின்றனர். சேவை பாதிப்பு குறித்து வங்கி நிர்வாகம் இதுவரை உரிய விளக்கம் தராததால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.