ரக்ஷா பந்தனுக்கு தாய் வீட்டுக்குப் போக அனுமதி மறுப்பு: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை
தனது தாய் வீட்டுக்கு ரக்ஷா பந்தன் தினத்தில் செல்வதற்கு கணவன் அனுமதி மறுத்ததால் மன உளைச்சல் அடைந்த பெண், தனது இரு குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தனது தாய் வீட்டுக்கு ரக்ஷா பந்தன் தினத்தில் செல்வதற்கு கணவன் அனுமதி மறுத்ததால் மன உளைச்சல் அடைந்த பெண், தனது இரு குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஆக்ராவில் இருந்து 30 கி.மீ. தொலைவில், பதேபூர் மாவட்டத்தில் உள்ள நிபோரா பகுதியில் பிலைபுரா கிராமத்தில் வியாழக்கிழமை இன்று காலை எரிந்த நிலையில் சுதாமா (27), அவரது குழந்தைகள் நிஷா(4), கரிஷ்மா(2) ஆகியோரது உடல்களை போலீஸார் கைப்பற்றினர். சுதாமாவின் கணவர் கூலியாக வேலை செய்கிறார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.