இரவில் பெட்ரோல் பங்குகளை மூடும் பரிசீலனை : பிரதமர் அலுவலகம் நிராகரிப்பு
இரவு 8 மணிக்கு பெட்ரோல் பங்குகளை மூடும் மத்திய பெட்ரோலியத் துறையின் பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு 8 மணிக்கு பெட்ரோல் பங்குகளை மூடும் மத்திய பெட்ரோலியத் துறையின் பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் மற்றும் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர மற்ற அனைத்து பெட்ரோல் பங்குகளையும் இரவு 8 மணிக்கு மூடி விடுவது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பரிசீலனைக்குக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில், இதற்கு பொது மக்களும், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement