முகப்பு
தற்போதைய செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் : மருத்துவமனை ஊழியர்கள் கைது

புனேயில் போசரி முனிசிபல் மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 2 செப்டம்பர் 2013, 11:21 am IST
பகிர்:

புனேயில் போசரி முனிசிபல் மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையின் லிப்டில் பாலியல் பலாத்காரம் செய்த வார்ட் பாய் மற்றும் பாதுகாப்பு காவலர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மனநிலை பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாத 30 வயது பெண், மனநிலை காப்பகத்தில் இருந்து உடல் நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த போது ஆகஸ்ட் 29ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து சிகிச்சை முடிந்து மீண்டும் காப்பகத்துக்கு சென்ற போது, அங்கு அவர்களை கவனித்துக் கொள்ளும் நபரிடம், சைகை மொழியில் அப்பெண் கூறியதை அடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.