கேதார்நாத் கோயிலில் வழக்கமான பூஜைகள் துவக்கம்
கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலில் புதன்கிழமை காலை வழக்கமான பூஜைகள் துவங்கின.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM
கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலில் புதன்கிழமை காலை வழக்கமான பூஜைகள் துவங்கின.
வெள்ளம் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கேதார்நாத் கோயில் மூடப்பட்டது. இந்த நிலையில், பொதுப்பணித் துறை ஊழியர்கள் மேற்கொண்ட சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, இன்று காலை 7 மணியளவில் கோயில் திறக்கப்பட்டு சிறப்பான அலங்காரத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின.