முகப்பு
தற்போதைய செய்திகள்

வேடசந்தூர் : குடகனாறு அணையில் எலும்புக் கூடு கண்டெடுப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு அணையின் உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

Updated On : 11 செப்டம்பர், 2013 at 10:17 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு அணையின் உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

குடகனாறு அணையில் தண்ணீர் இல்லாமல் இருந்த  உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்று இருப்பதை அப்பகுதியில் மாடு மேய்க்க வந்தவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், எலும்புக் கூடு மீதிருந்த ஆடையை அடையாளமாக வைத்து, இதுவரை காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தினர்.

Advertisement

அதில், கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல் போன பாலப்பட்டி கிராமம் நாச்சிமுத்துவின் மகள் நித்யா (16) என்பது தெரிய வந்துள்ளது. எலும்புக் கூடு மீதிருந்த ஆடையை அடையாளமாக வைத்து, அவரது பெற்றோர், அது தனது மகள் நித்யா, காணாமல் போன அன்று அணிந்திருந்த ஆடை என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, எலும்புக் கூடை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து சென்னை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.