திருவனந்தபுரம் : மருத்துவமனை விடுதி உணவில் பாம்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையின் உணவு விடுதியில் வாங்கிய உணவில் செத்த குட்டிப் பாம்பு ஒன்று இருந்தது நோயாளிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையின் உணவு விடுதியில் வாங்கிய உணவில் செத்த குட்டிப் பாம்பு ஒன்று இருந்தது நோயாளிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
நோயாளியின் தாய் ஒருவர் வாங்கிய உணவு பொட்டலத்தில் செத்துப் போன குட்டிப் பாம்பு ஒன்று இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மருத்துவ நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் புகார் அளித்தனர்.
இது குறித்து செய்தி அறிந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும், அவர்களது உறவினர்களும், விடுதி முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Advertisement
Advertisement
காவல்துறை விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர். உணவு விடுதியை மூட உத்தரவிடப்பட்டது.