தற்போதைய செய்திகள்

கடலூரில் கிராம உதவியாளர் அடித்துக்கொலை

கடலூர் அருகே கிராம உதவியாளரை அடித்துக்கொன்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு அங்காளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(60). கிராம உதவியாளர். இவர் திங்கள்கிழமை இரவு குடிகாடு அருகே பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு புறப்பட்டுள்ளார். 

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் அருகே கிராம உதவியாளரை அடித்துக்கொன்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு அங்காளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(60). கிராம உதவியாளர். இவர் திங்கள்கிழமை இரவு குடிகாடு அருகே பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு புறப்பட்டுள்ளார். 

அப்போது எதிரில் வந்த மோட்டர் சைக்கிள், பாலகிருஷ்ணன் மோட்டர் சைக்கிள் மீது மோதியதாகவும், அப்போது மோட்டர் சைக்கிளில் வந்த 3 பேருக்கும், பாலகிருஷ்ணனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாவும் கூறப்படுகிறது.  இதில் 3 பேரும் சேர்ந்து பாலகிருஷ்ணனை தாக்கியுள்ளனர். கீழே விழுந்த அவரை அங்கேயே போட்டுவிட்டு 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT