தற்போதைய செய்திகள்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இயந்திர கோளாறு: 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது

செங்கோட்டையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு என்றும் வழக்கம் போல் இரவு 9.20-க்கு வரும். ஆனால், இக்குறிப்பிட்ட ரயில் விருதுநகர்

எஸ். பாண்டியன்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சனிக்கிழமை இரவு 1 மணிநேரம் தாமதமாகவே விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு என்றும் வழக்கம் போல் இரவு 9.20-க்கு வரும். ஆனால், இக்குறிப்பிட்ட ரயில் விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் ரயில்வே கேட்டை கடந்து வ்நதபோது திடீரென ரயிலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.அதையடுத்து, மிகக் குறைந்த வேகத்திலேயே ரயிலை இயக்கி விருதுநகர் ரயில் நிலையத்திற்கு இரவு 10.40-க்கு கொண்டு வந்தனர். அதையடுத்து, ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பொறியாளர் உள்ளிட்டோருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, ரயில் நிலையத்தில் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்ததால்  இயந்திரத்தில் இருந்த பழுதை உடனே நீ்க்கம் செய்தனர். அதன் பின்னர் 11.20-க்கு ஒரு மணிநேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. இதனால், இரவில் ரயில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT