பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சனிக்கிழமை இரவு 1 மணிநேரம் தாமதமாகவே விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.
செங்கோட்டையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு என்றும் வழக்கம் போல் இரவு 9.20-க்கு வரும். ஆனால், இக்குறிப்பிட்ட ரயில் விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் ரயில்வே கேட்டை கடந்து வ்நதபோது திடீரென ரயிலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.அதையடுத்து, மிகக் குறைந்த வேகத்திலேயே ரயிலை இயக்கி விருதுநகர் ரயில் நிலையத்திற்கு இரவு 10.40-க்கு கொண்டு வந்தனர். அதையடுத்து, ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பொறியாளர் உள்ளிட்டோருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, ரயில் நிலையத்தில் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்ததால் இயந்திரத்தில் இருந்த பழுதை உடனே நீ்க்கம் செய்தனர். அதன் பின்னர் 11.20-க்கு ஒரு மணிநேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. இதனால், இரவில் ரயில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.