தற்போதைய செய்திகள்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு எஸ்ஐகளுக்கு அதிகாரம் இல்லை: டிஐஜி முருகன்

சிறப்பு எஸ்ஐகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என விழுப்புரம் சரக டிஐஜி முருகன் கூறினார்.

VASUDEVAN.K

சிறப்பு எஸ்ஐகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என விழுப்புரம் சரக டிஐஜி முருகன் கூறினார்.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணிபுரிந்து வரும் சிறப்பு எஸ்ஐகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் போலீஸ் ஜாங்கீட் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

 இதில் விழுப்புரம் சரக டிஐஜி முருகன் பேசியது, சிறப்பு எஸ்ஐகள் என்றாலும் சீனியர் ஏட்டுகள்தான். அனைத்து பணிகளையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் ஏட்டுகள் செய்கின்ற வேலைகளை நீங்களும் செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் பாரா வேலையையும் பார்ப்பதற்கு தயக்கம்காட்ட கூடாது.

 அதே போல சிறப்பு எஸ்ஐகள் முதல் தகவல் அறிக்கையை மட்டும் தயார் செய்யலாம். ஆனால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய கூடாது. குற்றப்பத்திரிக்கையை எஸ்ஐகள் தான் தாக்கல் செய்ய வேண்டும். எந்தவித சிறு பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பான முறையில் பணிபுரிய வேண்டும் என்றார்.

 இதன் பின்னர் மாலையில் ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.  பிறகு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட எஸ்பி ஆ.ராதிகா, கூடுதல் எஸ்பி  ராஜன் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT