திருவாரூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் சேவை தொடங்கியது
இதே போல் மாலை 6.10 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்தும், இரவு 8.40 திருவாரூரிலிருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
திருவாரூர்-மயிலாடுதுறை இடையே ஞாயிற்றுக்கிழமை பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
திருவாரூர் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2009 ல் தொடங்கப்பட்டு 2012-ல் நிறைவடைந் தது. கடந்த ஆண்டு, முதலில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரைவு ரயில் போக்குவரத்துச் சேவைத் தொடங்கியது. இந்நிலையில் தற்போது பயணிகள் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
திருவாரூர் மயிலாடுதுறையில் நாள்தோறும் காலை மாலை பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு 7.35 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேருகிறது. இதே போல் திருவாரூரிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.
Advertisement
Advertisement
இதே போல் மாலை 6.10 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்தும், இரவு 8.40 திருவாரூரிலிருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.