பசுந்தீவணம் சாகுபடி செய்ய அரசு மான்யம்: மாவட்ட ஆட்சியர்
தமிழக முதல்வரால் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அவற்றிற்கு பசுந்தீவணம் அளிப்பதன் முக்கியத்துவத்தை
திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் திட்டத்தின்கீழ் பசுந்தீவணம் சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
தமிழக முதல்வரால் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அவற்றிற்கு பசுந்தீவணம் அளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த தமிழக அரசு,கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவணம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக மாநில தீவண
Advertisement
Advertisement
விரைவு அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் தீவணப்புல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் பசுந்தீவணம் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேவையான விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.