முகப்பு
செய்திகள்

தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக ஆசை: ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் தமிழ் சினிமா குறித்து பேசியுள்ளார்...

நடிகை ஜான்வி கபூர்
பகிர்:

நடிகை ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் நடிக்க அதிக ஆசை இருப்பதாகக் கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் பெற்று வருகிறார். தெலுங்கில், தேவரா படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவுக்குள் வந்தார்.

தற்போது, தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதுடன் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். ஆஸ்கர் வரை மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற, ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Advertisement

Advertisement

நடிகர் ராம் சரணுடன் இவர் நடித்த பெத்தி ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஜான்வி கபூர், “நான் தென்னிந்திய படங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளேன். தமிழ், தெலுங்கு மொழிகள் புரிந்துகொள்ள எளிதாக இருக்கிறது. ஆனால், மலையாளம் இனிமையான மொழியாக இருந்தாலும் அதனைப் புரிந்துகொள்வதில் எனக்கு சிரமம் உள்ளது. அதனால், இப்போதைக்கு மலையாள சினிமாவில் நடிக்க திட்டம் இல்லை. தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டுமென அதிக ஆசை உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Janhvi Kapoor has stated that she has a strong desire to act in Tamil cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.