முகப்பு
செய்திகள்

நாட்டுப்புறக் கலைஞராக ஷ்ரத்தா கபூர்..! தேசிய விருது கிடைக்குமா?

நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

Updated On : 9 ஜூன் 2026, 7:29 pm IST
ஷ்ரத்தா கபூர். - படம்: எக்ஸ் / ஷ்ரத்தா கபூர்.
பகிர்:

நடிகை ஷ்ரத்தா கபூர் நாட்டுப்புறக் கலைஞராக நடித்துள்ள ‘ஈதா’ (Eetha) என்ற திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேடாக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை லஷ்மண் உடேகர் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் ஷ்ரத்தா கபூர் (39 வயது) 2010ல் தனது முதல் படத்தில் அறிமுகமானார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஸ்ட்ரீ 2 மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Advertisement

Advertisement

தற்போது, ஈதா படத்தில் மகாராஷ்டிரத்தில் மிகவும் புகழ்பெற்ற லாவணி நடனக் கலைஞர் விதாபாய் நாராயண்காவ்ங்கர் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ரந்தீப் ஹூடா, முகமது ஜீஷன் ஆயுப் நடித்துள்ளார்கள். ஸ்ட்ரீ படத்தைத் தயாரித்த தினேஷ் விஜயன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

விதாபாய் நாராயண்காவ்ங்கர் மகாராஷ்டிராவின் நாட்டுப்புறப் பாரம்பரியத்தில், லாவணி மற்றும் தமாஷா பாணியிலான கலைகளின் மூலமாக மக்களிடையே கவனம்பெற்றவர். நாட்டுப்புறக் கலையில் சிறப்பாக பங்காற்றியதற்காக 1957, 1990ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடிகை ஷ்ரத்தா கபூர் தேசிய விருது வெல்லாத ஷ்ரத்தா கபூர் இந்தப் படத்துக்கு முதல்முறையாக வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Shraddha Kapoor's 'Eetha' to release on August 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.