FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றம் நோக்கி பேரணி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு

நாடாளுமன்றம் நோக்கி வரும் ஜூலை 20-ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வியாழக்கிழமை அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொள்ள சிஜேபி அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 1:06 am IST
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி - கோப்புப் படம்
பகிர்:

நாடாளுமன்றம் நோக்கி வரும் ஜூலை 20-ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வியாழக்கிழமை அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொள்ள சிஜேபி அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், கூட்டத்தின் முதல் நாள் இந்தப் போராட்டத்தை சிஜேபி அறிவித்துள்ளது.

தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் சிஜேபி நடத்திவரும் போராட்டம் 20-ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்தது.

Advertisement

Advertisement

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்து வருகிறாா்.

இந்நிலையில், அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து சிஜேபி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பல்வேறு நுழைவுத் தோ்வுகளில் நிகழ்ந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நீதி கோரி ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படவுள்ளது. இதில் சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் பங்கேற்கிறாா். நாடு முழுவதும் இருந்து பெருந்திரளான குடிமக்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments