முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் நல்லாட்சியை நடத்த வேண்டும்: ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்

கர்நாடக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் நல்லாட்சியை புதிய அரசு நடத்த வேண்டும் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.

Updated On : 12 மே 2013, 9:38 pm IST
பகிர்:

கர்நாடக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் நல்லாட்சியை புதிய அரசு நடத்த வேண்டும் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று அரசு அமையவுள்ளது. மக்கள் அளித்த தீர்ப்பால் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த அரசிடம் மக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை வைத்துள்ளனர். மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் நல்லாட்சியை புதிய அரசு வழங்க வேண்டும். மக்களின் விருப்பங்களை அறிந்து, அதன்படி புதிய திட்டங்களை வகுத்து செயலாற்ற வேண்டும். சித்தராமையா தலைமையில் திங்கள்கிழமை புதிய அரசு அமையவுள்ளது. நல்லாட்சி நடத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து சித்தராமையா சிறந்த ஆட்சியை தருவார் என்று நம்புகிறேன் என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.