வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பாக இருக்கும்: சோபிதா துலிபாலா
வேட்டுவம் குறித்து சோபிதா துலிபாலா...
நடிகை சோபிதா துலிபாலா வேட்டுவம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் நீண்ட காலமாக வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்ததாகத் தகவல் வெளியானாலும் மீண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகர்கள் ஆர்யா, விஆர் தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அறிவியல் புனைவாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சோபிதா துலிபாலா, “வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படமாக இருக்கும். இயக்குநர் பா. இரஞ்சித் சில பகுதிகளை சயின்ஸ் பிக்ஷன் பாணியிலும் படமாக்கி வருகிறார். வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் சுவாரஸ்யமான படமாகவே வேட்டுவம் உருவாகி வருகிறது.” எனக் கூறியுள்ளார்.
Actress Sobhita Dhulipala has spoken about the film Vettuvam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.