கார்கி படத்தில் நடித்திருந்தால்... ஐஸ்வர்யா லட்சுமி பேச்சு!
கார்கி படம் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி...
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கார்கி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
தமிழில் ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. தற்போது கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “கார்கி திரைப்படம் முதலில் எனக்குதான் வந்தது. ஆனால், இதில், பெரிய நடிகை யாராவது நடித்தால்தான் சரியாக இருக்குமென சாய் பல்லவியை அணுகச் சொன்னேன். இப்போது, கார்கி கதை என்னிடம் வந்தால், நான் அதில் நடிப்பேன். கதையின் முக்கியத்துவம் கருதி அதனைத் தயாரிக்கவும் செய்வேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
கார்கி திரைப்படம் பல விருதுகளை வென்றதுடன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Actress Aishwarya Lekshmi has spoken about the movie Gargi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.