ஆம்பூர் அருகே நெல் உமி ஏற்றிச் சென்ற லாரி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
வேலூரிலிருந்து ஆம்பூர் நோக்கி ஒரு லாரி நெல் உமி லோடு ஏற்றிக் கொண்டு சென்றது. ஆம்பூர் அருகே பச்சகுப்பம் கிராமத்தருகே சென்றபோது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் டிரைவர் திடீரென பிரோக் போட்டார். லாரி நிலைத்தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. அதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு கவிழ்ந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. போக்குவரத்து சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.