தற்போதைய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

இதுதொடர்பாக அச்சங்கத்தின் கரூர் மாவட்டத்தலைவர் வி.கே.தங்கவேல் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி வந்த கேரள அரசின் கபடத்தனம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்

ஏ. அருள்ராஜ்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் கரூர் மாவட்டத்தலைவர் வி.கே.தங்கவேல் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி வந்த கேரள அரசின் கபடத்தனம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஏதோ தனக்கு மட்டுமே முல்லைப் பெரியாறு அணை சொந்தம் என எண்ணிக்கொண்டு இறுமாப்புடன் நீதிமன்றங்களுக்கு தாழ்பணியாமல் தனக்குத்தானே அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிய கேரள அரசுக்கு இது ஒரு சவுக்கடி. அணை பலமாக இருக்கிறது என தமிழக அரசு வாதிட்ட போதும், பலவீனமாக இருப்பதாக கூறி, இதுவரை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் தென்மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இனியாவது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, இறுமாப்பை கைவிட்டு, தமிழகத்தில் உள்ளவர்களும் விவசாய நண்பர்கள்தான் என நினைத்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு முன்வரவேண்டும்.

இதுமட்டும் தமிழக விவசாயிகளுக்கு தீர்வாகிட முடியாது. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் தேசியமயமாக்கி இணைக்க வேண்டும். ஒரிஷா மாநிலத்தில் உள்ள மகாநதியில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. நதிகள் இணைக்கப்பட்டால், தமிழகத்தில் கோடை காலம் கூட வசந்த காலம் போல இருக்கும். தற்போது போதிய மழைநீர் கிடைக்காததால் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய உற்பத்தி இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும். எனவே நாட்டின் பொருளாôதாரம் காக்கப்பட வேண்டும் என்றால், நதிகள் இணைக்கப்பட வேண்டும். அதற்கு உறுதியான சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT