அதிருப்தி வேட்பாளர்களை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சிவெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு மாநகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்திவேட்பாளர்களை கட்சியில் இருந்துநீக்கி மாநிலத்தலைவர் ஜி.பரமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார்.
கட்சியில் இருந்துநீக்கப்பட்ட அதிருப்தி வேட்பாளர்கள்: ராயபுரம் வார்டு-கமலா அஞ்சன், தீபாசந்திரசேகர், ஆயாஸ்பேகம், அல்சூர் வார்டு-மம்தா சரவணா, மாரப்பனபாளையா வார்டு-சாகர் சதீஷ், மகாலட்சுமிபுரம் வார்டு-ஜெயலட்சுமி, விருஷபாவதிநகர் வார்டு-பத்மாபிரகாஷ், சகாயபுரம் வார்டு-ஏழுமலை, வித்யாபீடா வார்டு-ஆஷாகார்த்திக், ஜெயநகர் கிழக்கு வார்டு-முனிசஞ்சீவையா, ஹொய்சலாநகர் வார்டு-ஆனந்த், நந்தினி லேஅவுட் வார்டு-பி.என்.குமார், ஓகலிபுரம் வார்டு-அமல்நாத் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.