தற்போதைய செய்திகள்

ரேசன் கடையில் முறைகேடு: விற்பனையாளர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்ட பகுதியில் கூட்டுறவு நியாய விலைக்கடையில் முறைகேடு செய்த விற்பனையாளரை பணியிடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட பகுதியில் கூட்டுறவு நியாய விலைக்கடையில் முறைகேடு செய்த விற்பனையாளரை பணியிடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் அரிசி, கோதுமை ஆகியவைகளை நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யாமல் முறைகேடு செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூரர்த்தி தலைமையில் பறக்கும் படையினர் நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பொருள்களின் இருப்பு குறைவு, பதிவேடுகள் சரியான பராமரிப்பு செய்யாதது உள்பட பல்வேறு முறைகேடுகள் கண்டறிந்த, அக்கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.28575 வரையில் அபராதம் விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடும் முறைகேட்டில் ஈடுபட்ட காளையார்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் நியாயவிலைக்கடை விற்பனையாளர் மீது நடவடிக்கைக்கு தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்படி நியாய விலைக்கடையின் விற்பனையாளர் மு.பாண்டியராஜன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT