தற்போதைய செய்திகள்

வரும் 12ம் தேதி முதல்வர் அறைக்கு ஓ. பன்னீர் செல்வம் மாறுவார் என தகவல் 

DIN

சென்னை

புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஓ. பன்னீர் செல்வம் தலைமை செயலகத்தில் ஜெயலலிதா இருந்த அறைக்கு சென்று தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா அல்லது ஏற்கனவே அவர் நிதியமைச்சராக இருந்த அறையிலேயே முதல்வர் பதவியை கவனிப்பாரா என்ற கேள்வி சிலரிடம் எழுந்துள்ளது.

எனினும் முதல்வர் அலுவலகத்தையே ஓ. பன்னீர் செல்வம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த படங்கள், புத்தகங்கள், ஆவணங்கள் முக்கிய நினைவுச் சின்னங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட வற்றை போலீசார் நேற்று போயஸ் கார்டன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டனர்.

தற்போது முதல்வர் அறை காலியாக உள்ளது. புதிய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இந்த அறைக்கு வரும் 12ம் தேதி மாறுவார் அன்று முதல் முதல்வர் தலைமைச் செயலகத்துக்கு வந்து பணியாற்றுவார் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

குடிநீா்த் திட்டப் பணிகள்: வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது

கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

SCROLL FOR NEXT