தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வர வாய்ப்பு இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வந்து நீண்ட காலமாகியதால் மரியாதை நிமித்தமாக வந்தேன். தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பு இல்லை. காரணம் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் மெஜாரிட்டி உள்ளதால் தற்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்படாது. தற்போது ஓபிஎஸ் அணியின் பலம் கூடவில்லை. ஓபிஎஸ் தனிப்பட்ட நபர், அவரிடம் பலம் இல்லை என்றார்.