தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் நடைபெறும் குதிரை பேர ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்: ஸ்டாலின்

DIN

சென்னை ஆர்.கே நகர் திமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். ஆர்.கே நகர் தேர்தலில் தோழமைக்கட்சி ஆதரவோடு திமுக வேட்பாளர் வேற்று பெறுவார் என்று அவர் கூறினார். 

மேலும் அவர் பேசும் கூறியதாவது: சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஆனால், இடைத் தேர்தலுக்கு இடைத் தேர்தல் ஆர்.கே.நகரில்தான் நடைபெறுகிறது. 

இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. எம்.பி. வெங்கடேஷ் பாபு, வீடு வீடாக சென்று பெண்களுக்கு ஒரு விண்ப்ப படிவத்தை கொடுத்து வருகிறார். அதாவது, ஸ்கூட்டி வேண்டுவோர் இந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுத்தால் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். 

இந்த திட்டம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவித்த திட்டம். இதற்காக நிதியே ஒதுக்கப்படவில்லை. ஆனால், இப்போது வாக்காளர்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக, ஸ்கூட்டி வழங்குவதாக கூறுகின்றனர். இந்த முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்களே இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

புயல் குறித்த வானிலை மைய எச்சரிக்கையை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. மாயமான மீனவர்கள்  குறித்த எந்த விவரமும் முதல்வருக்கு தெரியவில்லை. ஆர்.கே.நகர் வாக்காளர்கள், நமது வேட்பாளர் மருதுகணேஷ்-க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெறும் குதிரை பேர ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT