மத்திய நிதி அமைச்சர் தலைமையில் இன்று மீண்டும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கூடியது. ஆனாலும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள், வரி விதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தின.
இதனால், இன்றும் உரிய முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
வரும் நிதி ஆண்டு தொடங்கும் ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரலாம் என நம்பிக்கை உள்ளதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.