தற்போதைய செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுல்யூ. புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ANI

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுல்யூ. புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (93). இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), அமெரிக்காவின் 43-வது அதிபராக பதவி வகித்தவர். பார்பரா புஷ் கடந்த செவ்வாய்கிழமை (ஏப் 17) காலமானார். அவரது மறைவுக்கு பின், முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுல்யூ. புஷ் உடல்நலக்குறைவு காரணமாக ஹூஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புஷ் நேற்று காலை ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தகுந்து சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். தற்போது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

தமிழ் இனத்துக்கும் சமூக நீதிக்கும் விரோதி திமுக! - Tamilisai Soundararajan

SCROLL FOR NEXT