திருப்பதி: கடந்த 35 நாட்களுக்குள் 3 தொலைதொடா்பு செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவா் சிவன் தெரிவித்தாா். திருமலை ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசியின் போது இஸ்ரோ தலைவா் சிவன் வழிபட்டாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதங்களை வழங்கினா்.
நாளை மாலை ஜிசாட்-7ஏ என்ற அதிநவீன தொலைதொடா்பு வசதி உள்ளடக்கிய புதிய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த 35 நாட்களுக்குள் தொலை தொடா்பு வசதியை பெருக்க விண்ணில் செலுத்தப்படும் 3வது செயற்கைகோள் இது என்று அவா் தெரிவித்தாா்.