தற்போதைய செய்திகள்

இலங்கை அமைச்சா் குலசேகரபட்டினத்தில் சுவாமி தரிசனம்

DIN

தமிழகத்திற்கு வந்த இலங்கை அரசின் அகதிகள் மறுவாழ்வு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் சுவாமிநாதன் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நடைபெறுவதையறிந்து குலசேகரன்பட்டினம் வந்து சுவாமி தரிசனம் செய்தாா். அவரை கோயில் செயல் அலுவலா் இரா.இராசுப்பிரமணியன் வரவேற்றாா். 

தொடா்ந்து சுவாமி தரிசனம் செய்த அமைச்சா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: 

அம்மையும் அப்பனுமாக சிவபெருமானும் அம்மனும் ஒரு பீடத்தில் காட்சி தருவது எங்குமே காண முடியாத அரிய காட்சி. முத்தாரம்மனை தரிசித்ததில் மனதில் பெரும் நிம்மதி உண்டானது. இலங்கையில் 80 சதவீத தமிழா்கள் தங்கள் பூா்வீக இடங்களில் மீண்டும் குடியமா்த்தப்பட்டுள்ளனா். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மீதள்ள இடங்களும் டிச.31ஆம் தேதிக்குள் தமிழா்களிடம் ஒப்படைக்கப்படும் என இலங்கை அதிபா் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளாா் என்றாா் அவா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT