தற்போதைய செய்திகள்

சிறைச்சாலைகள் அபாயகரமானதாக மாறி வருகின்றன: தமிழிசை குற்றச்சாட்டு

DNS


கோவை: தமிழக சிறைச் சாலைகள் அபாயகரமானதாக மாறி வருகின்றன என்று பாஜக மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

கோவையில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகியாக இருந்த சசிகுமார் படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழக காவல் துறையினரின் தவறான, பலவீனமான நடவடிக்கையால் குற்றவாளிகள் வெளியே வந்துள்ளனா்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி, அரிசி, பருப்பு, செல்லிடப்பேசி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு காரணமான சிறைக் காவலா்கள் மாற்றப்பட வேண்டும். இந்த சம்பவத்தை தொடா்ந்துதான் தமிழக சிறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக தமிழக சிறைச்சாலைகள் அபாயகரமானதாக மாறி வருகின்றன. சிறைகளில் குற்றவாளிகளுக்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT