சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப் முன்னிட்டு, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளதால், தமிழக அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிக்கும் வகையில், ஏப்பல் 18ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.