தற்போதைய செய்திகள்

பிகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா காலமானார்

DIN


புதுதில்லி: பிகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா(85) உடல்நலக் குறைவால் இன்று தில்லியில் காலமானார்.

பிகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திங்கள்கிழமை காலமானார். 

பிகார் மாநில முதல்வராக ஜெகநாத் மிஸ்ரா மூன்று முறை இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜெகநாத் மிஸ்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதீஷ் குமார், மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT